சமயபுரம் மாரியம்மன் கோவில் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் பக்தர் பலி

மண்ணச்சநல்லூர்:

சக்தி தலங்களில் முதன்மையானதும், பிரசித்தி பெற்றதுமான திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

அதேபோல், அண்டை மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை தந்து இரவு தங்கி காலையில் சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். தற்போது இந்த கோவிலில் பூச்சொரிதல் விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பக்தர்கள் வண்டிகளிலும், தலையில் பூக்கூடைகளை சுமந்தும் வந்து அம்மனுக்கு சாற்றி வழிபட்டு வருகிறார்கள். அந்த வகையில் இன்று 4-வது வார பூச்சொரிதல் நிகழ்ச்சி நடக்கிறது. இந்தநிலையில் சமயபுரம் கோவிலுக்கு வந்து இரவில் தங்கி இருந்து காலையில் அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வதற்காக வருகை தந்த ஏராளமான பக்தர்கள் கோவில் சன்னதி வீதி மண்டபத்தில் படுத்து உறங்கினர்.

Source link