பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு

பிரதமர் மோடியின் கோவை வருகை காரணமாக கோவை மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. போலீஸ் கமிஷனர் கண்ணன் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பிரதமர் மோடி வருகையை ஒட்டி விமான நிலைய பகுதியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் கோவை மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி வரை டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நீலாம்பூர், சிந்தாமணிபுதூர், செட்டிப்பாளையம், மதுக்கரை, எட்டிமடை, வாளையாறு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மற்றும் அவினாசி சாலை, பீளமேடு, சிட்ரா, நேரு நகர், சிங்காநல்லூர், எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, சின்னியம்பாளையம், காளப்பட்டி பகுதிகள், கொச்சி-பாலக்காடு சாலை, போத்தனூர், சுந்தராபுரம், ஈச்சனாரி பகுதிகள் தற்காலிக சிவப்பு மண்டல பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சீதோஷ்ண நிலை காரணமாக ஹெலிகாப்டரில் செல்ல முடியாவிட்டால் பிரதமர் மோடி காரில் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதன்காரணமாகவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. எனவே இந்த பகுதியில் இன்று மாலை 5 மணி வரை டிரோன்கள் பறக்க விட தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Source link