100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

செங்கல்பட்டு: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி சோளிங்கநல்லூர் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியிலிருந்து மாமல்லபுரம் வரை சுமார் 35 கி.மீ தூரம் 11,800 பேர் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.மாலதி ஹெலன் கொடியசைத்து துவக்கிவைத்தார்.

இதுகுறித்து அரசு வெளிட்டுள்ள அறிக்கையில், ‘ செங்கல்பட்டு மாவட்டம், சோளிங்கநல்லூர் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் மிதிவண்டி விழிப்புணர்வு பேரணியையையும், விழிப்புணர்வு சுடர் விளக்கினையும் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான மாலதி ஹெலன் கொடியசைத்து துவக்கிவைத்தார்.

Source link