தேசிய திருத்தலமான சாந்தோம் பேராலயத்தில் அதிபர் வின்சென்ட் சின்னதுரை தலைமையில் புனித ரபேல் மேல்நிலைப்பள்ளி அருகே இருந்து ஆலயம் நோக்கி நடைபெற்ற குருத்தோலை பவனியிலும் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு திருப்பலியிலும் ஏராளமான கிறிஸ்தவர்கள் குருத்தோலையுடன் கலந்துகொண்டனர்.
இதேபோல், சென்னை மயிலாப்பூர் லஸ் சர்ச், ராயப்பேட்டை காணிக்கை அன்னை ஆலயம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயம், எழும்பூர் திருஇருதய ஆண்டவர் திருத்தலம், புதுப்பேட்டை அந்தோணியார் ஆலயம், பாரிமுனை தூய மரியன்னை பேராலயம் உள்ளிட்ட கத்தோலிக்க தேவாலயங்களிலும் சிஎஸ்ஐ திருமண்டல தலைமை ஆலயமான கதீட்ரல் பேராலயம், வேப்பேரி புனித அந்திரேயா ஆலயம், மயிலாப்பூர் நல்மேய்ப்பர் ஆலயம், ராயப்பேட்டை வெஸ்லி ஆலயம், எழும்பூர் புனித திருமுழுக்கு யோவான் ஆலயம் உள்ளிட்ட சிஎஸ்ஐ ஆலயங்களிலும் குருத்தோலை பவனியும், சிறப்பு ஆராதனையும் நடைபெற்றன.
