அடுத்தவன் மொழியை அறிவு என்கின்றனர். அது எப்படி அறிவாக முடியும்? தமிழகத்தில் எங்கும் தமிழ் இல்லை; தமிழ் மொழி வெற்று முழக்கமாக மாறிவிட்டது. அதை மீட்க தமிழன் ஆட்சி மலர வேண்டும். சாதி, மதம் நமது அடையாளம் இல்லை; மொழி தான் நமது அடையாளம் என நாங்கள் வந்துள்ளோம். பல கோடி ரூபாய் பேரம் பேசி என்னை அழைத்தார்கள்; நான் போகவில்லை. தனித்து தான் நிற்கிறோம்.
மூன்றாவதாக கொண்டு வந்த எங்கள் கட்சியை முதலிடத்துக்கு நீங்கள் கொண்டு செல்வீர்கள் என நம்புகிறோம். தமிழர்கள் பொங்கல் பண்டிகைக்கு அரை கிலோ அரிசிக்கு கூட காத்திருக்கும்நிலை உள்ளது. பரம்பரை வீரம் போய், பதறு கூட்டமாக மாற்றிவிட்டனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் யாரிடமும் கையேந்த விடமாட்டோம்.
கட்டணமின்றி உலகத் தரமான கல்வி, மருத்துவம் தருவோம்; அனைத்து உயிருக்கும் இலவசமாக தண்ணீர் கொடுப்போம். தண்ணீரை விற்க விடமாட்டேன். அனைவருக்கும் வேலை கொடுப்பேன். குறைந்த கட்டணத்தில் மின்சாரம்; எரிவாயு சிலிண்டர்கள் தடையின்றி தருவேன். இலவசம் ஒழிக்கப்படும்” இவ்வாறு சீமான் பேசினார்.
