சென்னை: சுங்க கட்டண உயர்வை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கை: ஏப்ரல் 1-ம் தேதி முதல் சுங்க சாவடி கட்டணம் தமிழகத்தில் சில இடங்களில் உயர உள்ளது.
அதாவது, தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர், பரனூர், வானகரம், கிருஷ்ணகிரி, மதுரை,நாங்குநேரி, வாணியம்பாடி, விராலிமலை, கப்பலூர், கனியூர், ஆத்தூர், தேனி உள்ளிட்டதேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் இந்தகட்டண உயர்வு அமல்படுத்தப்பட உள்ளது.
