234 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்.23ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் மே.4ஆம் தேதி வெளியாகிறது.
திமுக கூட்டணியில் உள்ள விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில், 6 தனித்தொகுதிகள், 2 பொதுத்தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சிதம்பரம் எம்.பி.யாக உள்ள விசிக தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
தேசிய அரசியலில் இருந்து மாநில அரசியலுக்கு திருமாவளவன் திரும்பியுள்ளது அவரது கட்சியினரை உற்சாகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திருமாவளவனுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
