திருப்பூர் தெற்கில் சவால்களை எதிர்நோக்கும் பாஜக

தற்போதைய தேர்தலில் திமுக சார்பில் மேயர் என்.தினேஷ்குமார் இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார். எனினும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், பட்டியலின சமூகத்தினர், இஸ்லாமியர்கள் என பல்வேறு சமூகத்தினரும் அதிக அளவில் உள்ளனர்.

இந்தத் தொகுதியில் பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச் சார்ந்த ஜாப்ஒர்க் நிறுவனங்கள் அதிகம் உள்ளன. திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட பெரும்பாலான பகுதிகளைக் கொண்ட இந்தத் தொகுதியில் குப்பை பிரச்சினை, சொத்து வரி, தொழில் வரி, பாதாள சாக்கடை கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு, மின் கட்டணம், நூல் விலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இந்தத் தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்பு உள்ளது.

அதே வேளையில், சிறுபான்மையினர் சமூகத்தின் வாக்குகளை முழுமையாக அறுவடை செய்யும் வேட்பாளரே இந்தத் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற கருத்தும் நிலவி வருகிறது. வேட்புமனு தாக்கல் இன்று தொடங்க உள்ள நிலையில் பாஜக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டால் களம் சூடுபிடிக்க வாய்ப்பு உள்ளது.

– ஆர்.தர்மலிங்கம்

Source link