“திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்”

சென்னை: “தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது” என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. அதன்படி, கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று மனுத்தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் இருந்தனர். கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து 4-வது முறையாக ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கொளத்தூர் தொகுதியில் கடந்த 3 முறை இருந்ததைவிட அதிகளவிலான ஆதரவை இப்போது கண்கூடாகப் பார்க்கிறேன். நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகு திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

Source link