சென்னை: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடி ஏப்.3ம் தேதி சென்னை வருகிறார். ஏப்.4ம் தேதி அவர் மயிலாப்பூர் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. முக்கிய கட்சிகளின் தலைவர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்து விட்டு, கையோடு தங்கள் தொகுதிகளை வலம் வர ஆரம்பித்துவிட்டனர்.
தமிழகத்தில் பாஜ வேட்பாளர்கள் பட்டியலை கட்சி மேலிடம் விரைவில் அறிவிக்க இருக்கிறது. இந் நிலையில் தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி சென்னை வர உள்ளார். ஏப்.3ல் புதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு அவர் அன்றைய தினமே சென்னை வருகிறார்.
பின்னர், ஏப்.4ம் தேதி சென்னையில் பாஜ நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். அதே நாளில் அவர் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் ரோடு ஷோ செல்கிறார். அங்கு போட்டியிட உள்ள பாஜ வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.
சட்டசபை தேர்தலுக்கு பின் முதல்முறையாக பிரதமர் மோடி தமிழகம் வருவதால் பாஜவினரும், கூட்டணிக் கட்சியினரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
