ஏ.ஆர். முருகதாஸ் மீது புகார்!

சிவகார்த்திகேயன் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான படம் ‘மதராஸி’. இப்படத்தை ஸ்ரீலக்ஷ்மி மூவிஸ் தயாரித்திருக்க சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்திருந்தார். வித்யுத் ஜம்வால் வில்லனாகவும் பிஜு மேனன், ஷபீர், விக்ராந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். அனிருத் இசைப்பணிகளை மேற்கொண்டிருந்தார். ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலுத்தது. 

இந்த சூழலில் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இயக்குநர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் மீது புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மதராஸி படத்தை ரூ.115 கோடியில் முடிப்பதாக கூறிவிட்டு, ரூ.170 கோடி வரை செலவிட்டதாகவும், இதற்கு ஏ.ஆர்.முருகதாஸின் சரியான திட்டமிடல் இல்லாததே காரணம் என குற்றம் சாட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பிலும் தயாரிப்பு நிறுவனம் தரப்பிலும் பேச்சு வார்த்தை நடந்ததாக சொல்லப்படுகிறது. அதில் இந்த நஷ்டத்தை சரிசெய்ய ஏ.ஆர்.முருகதாஸ் ‘ரமணா 2’ தெலுங்கு கதையினை எழுதிக் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்மதத்திற்கு தயாரிப்பு நிறுவனமும் ஓகே சொல்லியுள்ளதாக சொல்கின்றனர். 

Source link