கேரளாவில் ஏப்.9ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் விடுத்த பொது விவாதத்திற்கான சவாலை ஏற்றுக் கொண்டுள்ளார் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியை விட, இடதுசாரி (LDF) ஆட்சியில் குறைந்த எண்ணிக்கையிலான வீடுகளே கட்டப்பட்டதாக வி.டி.சதீசன் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், இது தொடர்பாகப் பொது விவாதத்திற்கு வருமாறு பினராயி விஜயனுக்கு சவால் விடுத்திருந்தார்.
