பள்ளி கல்வி துறையை மேம்படுத்தவும், ஆசிரியர்களுக்கு எனவும், சட்டசபை தேர்தலில், தி.மு.க., அளித்த வாக்குறுதிகளில், பெரும்பாலானவை நிறைவேற்றப்படவில்லை. அவற்றின் விபரம்: சட்டசபை அறிவிப்புகள்:
* நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த, ஒவ்வொரு பாடத்திற்கும் ஒன்று என, குறைந்தபட்சம் ஐந்து பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்படும்
* வரலாறு, வணிகவியல் போன்ற பாடப்பிரிவுகள் இல்லாத, அரசு மேல்நிலைப் பள்ளிகளில், மூன்றாம் பாடப்பிரிவு உருவாக்கப்படும்
* அனைத்து பள்ளிகளிலும், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும்
* பிளஸ் 2 வரை படிக்கும், பார்வையற்ற மாணவர்களுக்காக மின்னுரு புத்தகங்கள் உருவாக்கப்படும்.
* நுாலக சேவை கிடைக்காத கிராமங்கள், நகரப் பகுதிகளில், நுாலக நண்பர்கள் திட்டத்தின் வாயிலாக, நுாலக சேவை வழங்கப்படும்
* குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் வகையில், 18 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர் மூவருக்கு, கவிமணி விருதுடன், 25,000 ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படும்
* பொது நுாலக இயக்ககத்தின் கீழ் உள்ள, 1,926 கிளை நுாலகங்கள், 1,915 ஊர்ப்புற நுாலகங்களில், சர்வதேச நாளிதழ்கள், பருவ இதழ்கள் அனைத்தும், மின்நுால் சேவையாக வழங்கப்படும்
கடந்த 2021 தேர்தல் வாக்குறுதிகள்
* அரசியலமைப்பு சட்டத்தில், பொதுப்பட்டியலில் உள்ள கல்வி, மீண்டும் மாநில அரசு பட்டியலுக்கு மாற்றப்படும்
* அனைத்து அரசு பள்ளி மற்றும் கல்லுாரி மாணவியருக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்படும்
* மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், ‘4ஜி, 5ஜி’ இணையதள இணைப்பு, பதிவிறக்கம் செய்யும் வசதியுடன், கைக்கணினி வழங்கப்படும்
* அனைத்து கல்வி நிலையங்களிலும், ‘வை – பை’ வசதி செய்து கொடுக்கப்படும்
* அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், ஊட்டச்சத்து பெறும் வகையில், காலை வேளையில் பால் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
* பகுதிநேர ஆசிரியர்களான, ஓவிய, இசை, உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோரை பணி நிரந்தரம் செய்ய, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
* அடிப்படை ஊதியம் 8,000 ரூபாயாக நியமிக்கப்பட்டு, சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடும், 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு, மற்ற ஆசிரியர்களைப் போல், காலமுறை ஊதியம் வழங்கப்படும்
* பணிக்காலத்தில் உயர்கல்வி கற்று, பட்டம் பெறும் ஆசிரியர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்கப்படும்
* கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடிய, ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட ஊதிய உயர்வு, பணி உயர்வு உள்ளிட்ட பாதிப்பிலிருந்து நிவாரணம் வழங்கப்படும்
* தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும், தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமித்து, எட்டாம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக்கப்படும்.
