நீங்க ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.. உதயநிதியிடம் சபாநாயகர் சொன்ன வார்த்தை: அவையில் எழுந்த சிரிப்பலை – speaker jcd prabhakar said to udhayanidhi stalin you need to be careful

சட்டமன்றத்தில் பல நேரம் காரசாரமான விவாதங்கள் எழுந்து உறுப்பினர்கள் மத்தியில் கடுமையான வாக்குவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதே நேரம் சில சமயங்களில் உறுப்பினர்கள் அடிக்கும் கமெண்ட்களால் அவையில் சிரிப்பலையும் எழுகிறது. அதே போன்று ஒரு சம்பவம் இன்றைய தினம் சட்டமன்றத்தில் நடந்துள்ளது.

சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று மீண்டும் துவங்கியுள்ளது. இதனையடுத்து உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்கான கோரிக்கைகளை முன்வைத்து வரும் நிலையில், அமைச்சர்கள் அதற்கு பதிலளித்து வருகின்றனர். இதனிடையில் முன்னாள் அமைச்சர் கே.என். நேருவிற்கு உடல் நிலை சரியில்லை என்பதை குறிப்பிட்டு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அதற்கு சபாநாயகர் அளித்த பதில் காரணமாக அவை சிரிப்பலையில் மூழ்கியது.

Source link