தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், இந்த அரசை கவிழ்ப்பதற்கான முயற்சிகள் நடப்பதாக தவெகவினர் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இப்படியான நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் பேசியுள்ளது பரபரப்பினை கிளப்பியுள்ளது.
சிஎம் விஜய்யை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கையை பிடித்து பிரதமர் நாற்காலியில் அமர வைப்பார் என தவெகவின் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி பேசியுள்ளது பரபரப்பினை கிளப்பியுள்ளது. அவருடைய இந்த கருத்திற்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து பதிலடிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்கான முயற்சிகள் தொடர்கிறது என காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
Source link
