ஒவ்வொரு தேர்தலின் போதும் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது வாடிக்கையான ஒன்று தான்.
தற்போது சட்டசபை தேர்தல் நடக்கும் தமிழ்நாடு, கேரளம், அசாம், மேற்கு வங்காளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில் கேரளம் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் முதன்முதலாக வாக்களிக்க வரும் புதிய வாக்காளர்களுக்கு “அல்வா” வழங்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இளைஞர்கள் தேர்தலில் அதிகமாக வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை செயல்படுத்தப்பட உள்ளது.
