நேற்று (மார்ச்.31) நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கேவும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 128 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்த ஸ்கோரை 12.1 ஓவர்களில் எட்டி பிடித்து தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
இந்நிலையில் அணியின் வெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டன் ரியான் பராக், “டாஸ் வென்றது எங்களுக்கு மிகப்பெரிய சாதகமாக அமைந்தது. நாங்கள் திட்டமிட்டபடி விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது.
சிஎஸ்கே அணி வருவதற்கு முன்பே மைதானத்தில் ஓரிரு நாட்கள் நாங்கள் பயிற்சி செய்தோம்.
சிவப்பு மண் ஆடுகளம் மற்றும் மழை காரணமாக இருந்த ஈரப்பதம் பந்துவீச்சாளர்களுக்குக் கைகொடுத்தது.
எங்களது பந்துவீச்சாளர்கள் திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தினர். நான் முழு நேர கேப்டன் ஆக இருப்பது எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.
கேப்டன் ஆக இருப்பது எனக்கு ஒரு மிக பெரிய பொறுப்பு. இந்த வருடம் கோப்பையை வெல்வதே எங்களுடைய ஒரே இலக்கு.
அதற்காகத் திட்டமிடுவதிலும், வியூகங்களை வகுப்பதிலும் அதிக நேரம் செலவிட்டுள்ளோம்.
நான் முன்பே ஒரு பேட்டியில் சொன்னது போல, புத்திசாலித்தனமாக கிரிக்கெட் விளையாடும் ஒரு அணியாக இருக்க விரும்புகிறோம்.

களத்தின் சூழலைச் சரியாகக் கணித்து அதற்கு ஏற்றவாறு விளையாட வேண்டும் என நினைக்கிறோம்.
சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறோம்” எனப் பேசியிருக்கிறார்.
