நாமக்கல் அரசு மகளிர் விடுதியில் 30 பேருக்கு உடல் நலக்குறைவு: மாணவிகள் சாப்பிட்ட உணவு சோதனைக்கு அனுப்பி வைப்பு

நாமக்கல்- மோகனூர் சாலையில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாணவிகள் விடுதி உள்ளது. இங்கு 103 மாணவிகள் தங்கி உள்ளனர். இவர்கள் நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்து வருகின்றனர். தற்போது பிளஸ்- 1 மற்றும் பிளஸ்- 2 வகுப்புகளுக்கு தேர்வு முடிந்து விட்டதால் அவர்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். தற்போது விடுதியில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் 56 மாணவிகள் மட்டும் தங்கி படித்து வருகின்றனர்.

இந்த விடுதியில் கொல்லிமலை பகுதியை சேர்ந்த மாணவிகள் அதிகம் பேர் உள்ளனர். இந்நிலையில் நேற்று மதியம் மாணவிகளுக்கு விடுதியில் சாதம், முட்டை கோஸ் பொரியல் மற்றும் பரங்கிக்காய் சாம்பார் வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

Source link