நான்கு வழிச்சாலையாகும் திருவண்ணாமலை–கள்ளக்குறிச்சி சாலை: அமைச்சர் சொன்ன முக்கிய அப்டேட் – tiruvannamalai kallakurichi four lane road expansion works project it will start soon aadhav arjuna said

திருவண்ணாமலை–கள்ளக்குறிச்சி சாலை திட்டத்தில் மீதமுள்ள பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் வசந்தம் கார்த்திகேயன் கோரிக்கை வைத்துள்ளார்.

சட்டபேரவையில் இன்று முதலமைச்சர் விஜய் வசம் உள்ள காவல்துறை மானியக் கோரிக்கை மீது இன்று (செப்.03) சட்டப்பேரவையில் விவாதம் இன்று நடைபெற உள்ளது.

திருவண்ணாமலை–கள்ளக்குறிச்சி 4வழி சாலை

அதன்படி, இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய வசந்தம் கார்த்தியேகன், திருவண்ணாமலையில் இருந்து கள்ளக்குறிச்சி (தியாகதுருகம், மணலூர்பேட்டை வழியாக) கடலூர் மாவட்டத்தை இணைக்கும் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் திட்டத்தில், முதல் இரண்டு கட்ட பணிகள் முடிவடைந்துள்ளன.திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அடவி வழியாக தியாகதுருகம், திருவண்ணாமலை மற்றும் திருப்பதி செல்லும் பக்தர்கள் மற்றும் வாகனங்கள் அதிகளவில் இச்சாலையைப் பயன்படுத்துகின்றனர்.நிலுவையில் உள்ள மீதமுள்ள இரு கட்டப் பணிகளையும் விரைந்து முடித்தால் மட்டுமே இச்சாலை முழுமையாகப் பயன்பாட்டிற்கு வரும் என்பதால், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனச் கோரிக்கை வைத்தார்.

பணிகள் எப்போது நிறைவு?

இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறுகையில், இக்கோரிக்கை தற்போது நெடுஞ்சாலைத் துறையின் பரிசீலனையில் உள்ளது என்றும், கூடிய விரைவில் அதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுத் தொடங்கப்படும் என்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

₹176 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு

கடந்த திமுக ஆட்சியில் முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கள்ளக்குறிச்சி – திருவண்ணாமலை இடையேயான இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக உயர்த்தும் பணிகள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ₹176 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டன. மொத்தம் 65 கிலோமீட்டர் நீளம் கொண்ட இச்சாலையில், கோமுகி ஆறு உள்ளிட்ட முக்கிய நீர்நிலைகளின் குறுக்கே உயர்மட்டப் பாலங்கள் மற்றும் சிறுபாலங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போதைய நிலை

கள்ளக்குறிச்சி நகரம் முதல் சங்கராபுரம் வரையிலான முழுப் பகுதியிலும், திருவண்ணாமலை நகர எல்லையின் தொடக்கப் பகுதியிலும் சாலை அகலப்படுத்தும் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.
மூங்கில்துறைப்பட்டு உள்ளிட்ட இடைப்பட்ட பல கிராமப்புற வழித்தடங்களில் பணிகள் இன்னும் தொடங்கப்படாமலேயே உள்ளன. இதனால் அப்பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கின்றன.

பயணிகள் சந்திக்கும் சிரமங்கள்

நான்கு வழிச்சாலையாக சீரமைக்கப்பட்ட பாதையில் வேகமாக வரும் வாகனங்கள், திடீரெனப் பணிகள் முடியாத குறுகிய இருவழிச் சாலைப் பகுதிக்குள் நுழையும் போது கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றன. இது போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதுடன், பயணிகளின் பாதுகாப்பிற்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சாலை திருவண்ணாமலை கிரிவலம் வரும் பக்தர்கள் மட்டுமன்றி, பெங்களூரு, திருப்பதி, வேலூர் போன்ற முக்கிய நகரங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கும் பிரதான வழித்தடமாக விளங்குகிறது. எ னவே, விபத்துகளைத் தவிர்க்கவும் பயண நேரத்தைக் குறைக்கவும், விடுபட்ட அனைத்து இடங்களிலும் நெடுஞ்சாலைத்துறை பணிகளை விரைந்து முடித்துச் சாலையை முழுமையாகப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சாலை முழுமையாக பயன்பாட்டுக்கு வந்தால் கிடைக்கும் பயன்கள்

இருவழிச் சாலையாக இருந்த பாதை அகலப்படுத்தப்படுவதால், வாகனங்களின் வேகம் அதிகரித்து, கள்ளக்குறிச்சியில் இருந்து திருவண்ணாமலைக்கான பயண நேரம் கணிசமாகக் குறையும். திருவண்ணாமலை கிரிவலம் வரும் பக்தர்கள், திருப்பதி, பெங்களூரு மற்றும் வேலூர் செல்லும் நீண்ட தூரப் பயணிகளுக்குப் பயணம் மிகவும் எளிதாகவும் வசதியாகவும் அமையும். உயர்மட்டப் பாலங்கள், சிறுபாலங்கள் மற்றும் முறையான சாலை அமைப்புகளால் குண்டும் குழியுமான பாதைகள் சீரமைக்கப்பட்டு, வீதி விபத்துகள் பெருமளவில் தடுக்கப்படும். சரக்கு வாகனங்களின் போக்குவரத்து எளிதாகும் என்பதால், சுற்றியுள்ள கிராமப் பகுதிகளின் வணிகம், விவசாயப் பொருட்களின் போக்குவரத்து மற்றும் உள்ளூர் பொருளாதாரம் சிறப்பான வளர்ச்சி அடையும்.

Source link