“‘கருப்பு’ படத்திலும் வக்கீலாக ஒரு கேரக்டர்ல நடிச்சிருக்கேன்!” – வடிவேல் முருகன் |”I’ve played the role of a lawyer in the movie ‘Karuppu’ as well!” — Vadivel Murugan

வடிவேல் முருகன் பேசுகையில், “‘காட்டான்’ வாய்ப்புக்கு ஒரு வகையில் ‘கடைசி விவசாயி’தான் காரணம்னு சொல்லலாம். அந்தப் படத்துக்கு நான் விமர்சனம் செய்திருந்தேன். அதைப் பார்த்துட்டு இயக்குநர் மணிகண்டன் சார் என்கிட்ட பேசினாரு. ‘உங்களுடைய நம்பர் என்கிட்ட முன்னாடியே இருந்தது. என் படத்தைப் பத்தி நீங்க என்ன விஷயம் சொல்றீங்கனு பார்த்துட்டு பேசலாம்’னு இருந்தாக அவர் சொன்னார்.

பிறகு ‘கடைசி விவசாயி’ படத்தைப் பத்தி நிறைய உரையாடினோம். ‘உங்களுடைய கடைசி விவசாயி விமர்சனம் ரொம்ப கவித்துவமாக இருக்கு. சினிமாவை ரொம்ப சென்சிபிளாக அணுகுறீங்க’னு பாராட்டினாரு.

பிறகொரு நாள் கால் பண்ணி, ‘என்ன படம் போயிட்டு இருக்கு. ரெண்டு மூணு மாசம் ஃப்ரீயாக வச்சுக்கோங்க. ஒரு முக்கியமான கேரக்டர் இருக்கு’னு சொன்னாரு.

Vadivel Murugan - Kaattan Web Series

Vadivel Murugan – Kaattan Web Series

அங்கிருந்துதான் ‘காட்டான்’ பயணம் தொடங்குச்சு. இப்போ என்னுடைய காளை பாண்டியன் கேரக்டருக்கும் ரொம்ப நல்ல வரவேற்பு தர்றாங்க. ‘உங்ககிட்ட இருந்து இவ்வளவு டெப்தா ஒண்ணு எதிர்பார்க்கல’னு சொல்லி வாழ்த்துறாங்க.

அதாவது, ஒரு வாய்ப்பு கிடைச்சாதான் நமக்குள்ள இருக்கிற விஷயங்களை நிரூபிக்க முடியும். அப்படி மணிகண்டன் சார் என்னை நம்பி இந்த வாய்ப்பைக் கொடுத்ததுல ரொம்ப மகிழ்ச்சி. இப்போ சந்தோஷத்தைத் தாண்டி வேறொண்ணும் இல்ல!

ஏன்னா, கதையின் போக்கை மாற்றிக் கொண்டுப் போகிற ஒரு கதையின் நாயகன் கதாபாத்திரம் கிடைச்சது, இந்த குறுகிய காலத்துல எனக்கு கிடைச்ச பெரிய விஷயமாகப் பார்க்கிறேன். நிச்சயமாக, என்னை நடிகராக இந்த சீரிஸ் அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு போகும். இனி வரும் வாய்ப்புகளை தைரியமா, பக்குவமாக அணுகிடுவேன்னு நம்பிக்கையையும் இந்த வாய்ப்பு கொடுத்திருக்கு.” என்றார் மனநிறைவோடு.

Source link