ஆனால், அவருக்கு மேலூர் தொகுதியில் வாய்ப்பு வழங்கப்படாமல் தற்போது எம்எல்ஏ-வாக உள்ள பெரியபுள்ளானுக்கே மீண்டும் அதிமுக ‘சீட்’ வழங்கியது. வேட் பாளர் பட்டியல் அறிவிப்பதற்கு முன் ‘சீட்’ பெறுவதற்காக கடந்த சில நாட்களாகவே சென்னையில் முகாமிட்டிருந்த தமிழரசன், தனக்கு ‘சீட்’ கிடைக்காததால் அதிருப்தி அடைந்தார்.
அவர், சொந்த ஊருக்கு வராமல் சென்னையில் இருந்த திமுக அமைச்சரும், கிழக்குத் தொகுதி எம்எல்ஏ-வுமான பி.மூர்த்தியை சந்தித்து திமுகவில் சேர விருப்பம் தெரிவித்தார். பி.மூர்த்தி, கட்சித் தலைமையிடம் பேசி உடனடியாக முதல்வர் முன்னி லையில் அவரை திமுகவில் இணைந்தார்.
அவருடன் அவரது தம்பி பொன்னுசாமியும் திமுகவில் சேர்ந்துள்ளார். கே.தமிழரசன், 1996-2006-ம் ஆண்டு வரை மேலூரில் பத்தினெட்டாங்குடி கிராம ஊராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.
