“ஆப்பிள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களை தாக்குவோம்”

டெஹ்ரான்: ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட 18 முன்னணி அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களைத் தாக்கப் போவதாக ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி இரவு 8 மணி முதல் இந்த நிறுவனங்களின் மீதான தாக்குதல் தொடங்கலாம் என்று ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈரான் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் மைக்ரோசாப்ட், கூகுள், ஆப்பிள், இன்டெல், ஐபிஎம், டெஸ்லா மற்றும் போயிங் உள்ளிட்ட 18 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நிறுவனங்கள் ஈரானுக்கு எதிரான உளவுப் பணிகள், படுகொலைத் திட்டங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ராணுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவிற்கு உதவி செய்வதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

Source link