K.N.நேரு வீட்டில் நடந்து வரும் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு பழிவாங்கும் நடவடிக்கை இல்லை, ஆதாரங்கள் மற்றும் புகாரின் அடிப்படையில் தான் ரெய்டு நடக்கிறது
மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், பொதுமேடையில் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்றும், அவர் விசாரணைக்காக மட்டுமே அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுமேடை ஒன்றில் சம்பந்தமில்லாமல் பெண்கள் குறித்து அவதூறான கருத்துகளைப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரிலேயே இந்த விசாரணை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.அவர் கைது செய்யப்படவில்லை; காவல்துறை விசாரணைக்காக மட்டுமே அழைத்துச் செல்லப்பட்டார்.
K.N.நேரு வீட்டில் நடந்து வரும் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு பழிவாங்கும் நடவடிக்கை இல்லை. ஆதாரங்கள் மற்றும் புகாரின் அடிப்படையில் தான் ரெய்டு நடக்கிறது.லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை என்பது முற்றிலும் தனிப்பட்ட நடைமுறை என்றும், அதில் யாரும் தலையிட முடியாது. அங்கு என்ன நடந்துள்ளது என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினரே அதிகாரப்பூர்வமாகத் தகவல்களை வெளியிடுவார்கள் என்று தெரிவித்தார்.
