பணியாளர்களுக்கு மதிப்பில்லை
ச ட்டம் – ஒழுங்கு மோசமாக உள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் போதைப் பழக்கங்களுக்கு அடிமைகளாகி விட்டனர். பலர், பகலிலேயே குடித்துவிட்டு வேலைக்கு செல்வதில்லை. உள்ளாட்சி அமைப்புகளில் வேலை செய்யும் துாய்மை, ஒப்பந்த பணியாளர்களுக்கு உரிய மதிப்பில்லை. அடிமைகளாக நடத்தப்படுகின்றனர். இதை மாற்றுவதற்காக அ.தி.மு.க.,விற்கு ஓட்டு போட போகிறேன்.
போத்திராஜா, 43 சோழவந்தான், மதுரை
பணம், பதவி மீது அதீத பற்று
த ர்மபுரி மாவட்டம், இண்டூர்
சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது.
இங்குள்ள ஏரிகளில், கடந்த 15 ஆண்டுகளாக மழைநீரை சேமிக்க முடியாத நிலை
உள்ளது. விவசாயம் அழிந்து வருகிறது. பணம் மற்றும் பதவி மேல் கொண்ட அதீத
பற்றால், மாவட்டத்தின் வளர்ச்சி என்ற லட்சியத்தை யாரும் கையில்
எடுப்பதில்லை.
-எம்.செந்தில்குமார், 49 பேடரஹள்ளி, தர்மபுரி
