சபரிமலை தங்கம் காணாமல் போன விவகாரம்: ராகுல் வீட்டுக்கு குற்றவாளி சென்றது எப்படி?

இந்​நிலை​யில், பத்​தனம்​திட்​டா​வில் நடை​பெற்ற தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி பங்​கேற்​றார். அப்​போது, சபரிமலை தங்​கம் திருட்​டில் சிபிஐ (எம்) தலை​வர்​களுக்கு தொடர்பு இருப்​ப​தாகக் கூறி, ‘சுவர்​ணம் கட்​டது ஆரப்​பா’ (ஐயப்​பனின் தங்​கத்​தைத் திருடியது யார்?) என்ற பிரபல நையாண்​டிப் பாடலின் வரியை ராகுல் காந்தி பாடி​னார்.

இந்​நிலை​யில், திரு​வனந்​த​புரத்​தில் உள்ள ஏகேஜி மையத்​தில் முதல்​வர் பின​ராயி விஜயன் நேற்று செய்​தி​யாளர்​களுக்கு பேட்டி அளித்​தார். அப்​போது, சபரிமலை தங்​கம் திருடு​போன வழக்​கின் முக்​கிய குற்​ற​வாளி​யாக கருதப்​படும் உன்​னிகிருஷ்ணன் போற்​றி, டெல்​லி​யில் உள்ள காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் சோனியா காந்​தி​யின் இல்​லத்​தில் இருக்​கும் புகைப்​படம் சமூக வலை​தளங்​களில் பரவி வரு​வதை சுட்​டிக்​காட்​டி, “திருட்​டில் தொடர்​புடைய​வர்​கள் எப்​படி உங்​கள் வீட்​டுக்​குச் சென்​றார்​கள்?” என ராகுலுக்கு கேள்வி எழுப்​பி​னார். இதுபற்றி அவர் யோசித்​துப் பார்த்​தால் பதில் கிடைத்​து​விடும் என்​றும் விஜயன் தெரி​வித்​தார்.

முன்​ன​தாக, திங்​கள்​கிழமை பேசிய ராகுல் காந்​தி, பிரதமர் நரேந்​திர மோடி சபரிமலை விவ​காரம் குறித்து மவுனம் காப்​ப​தாகக் குற்​றம் சாட்​டி​னார் என்பது குறிப்பிடத்தக்கது​.

Source link