இவை கடந்த ஆண்டு, நவ.21-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. இதை பெரும்பாலான நிறுவனங்கள் உடனடியாக அமல்படுத்தவில்லை. இன்று தொடங்கும் புதிய நிதியாண்டில் இருந்து அமல்படுத்துகின்றன. இந்த புதிய சட்டத்தில், தொழிலாளரின் மொத்த ஊதியத்தில், அதாவது நிறுவனத்தின்
வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய நிதி பங்களிப்பு, விடுப்புக்கு ஈடாக பணம் பெறுதலுக்கான பங்களிப்பு உள்ளிட்டஅனைத்தும் சேர்த்த மொத்த ஊதியத்தில் அல்லது மொத்தசிடிசியில் (CTC) 50 சதவீதத்தைஅடிப்படை ஊதியமாக கணக்கிட வேண்டும் என்ற முக்கிய அம்சம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு நிறுவனங்கள் அடிப்படை ஊதியத்தை நிர்ணயிக்கும்போதும், தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி சேமிப்பும், அதற்கு இணையாக நிறுவனத்தின் பங்களிப்பும் அதிகரிக்கும். அதன் பயனாக வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியம் அதிகமாக கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் விடுப்புக்கு ஈடாக பணமாக பெறும் தொகையும் அதிகமாகும். மேலும் ஓய்வுபெறும்போது பணிக்கொடையும் அதிகமாக கிடைக்கும்.
