இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் இந்த நிலக்கரி கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, நிலக்கரி மையத்தில் உள்ள தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மணலி, மாதவரம், எண்ணூர், எஸ்பிளனேட், திருவல்லிக்கேணி உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
இதையடுத்து, காலை 6 மணிக்குள் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, அதிகாரிகளிடம் சேத விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
