சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை, சடலத்தை மீட்டு விசாரணையை தொடங்கியது. சடலத்துடன் அறையில் தற்கொலை குறிப்பும் இருந்தது. அதில், பொருளாதார பிரச்னைகள், வேலை இல்லததால் ஏற்பட்ட விரக்தி, உடல் நலப் பிரச்னைகள் காரணமாக இந்த முடிவை எடுத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. சடத்துக்கு அருகில் அமைதியாக அமர்ந்திருந்த பீபி ஷாஜியா சிராஜ் சுமார் 20 நிமிடங்கள் அமர்ந்திருந்தவர், திடீரென அங்கிருந்து மாயமானர். அடுத்த சில நிமிடங்களில் 18-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
அமைதியாக தொடங்கிய அந்தக் காலை வேளை, அடுத்தடுத்த கணவன் மனைவியின் தற்கொலை முடிவுகள் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அதைத் தொடர்ந்து, கடிதத்தின் உள்ளடக்கம் மற்றும் தம்பதியினரின் சமீபத்திய நிதி மற்றும் தனிப்பட்ட சவால்கள் உட்பட, மரணங்களுக்கு வழிவகுத்த சூழ்நிலைகளை ஆராய்ந்து, காவல்துறை தங்கள் விசாரணையைத் தொடங்கியிருக்கிறது. வேலையின்மை தொடர்பான கவலையுடனும், சமீபத்திய மாதங்களில் அதிகரித்து வரும் அழுத்தங்களுடனும் அந்த நபர் போராடி வந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. மேலதிக விசாரணை நடந்து வருகிறது.

