திப்ருகர்: அசாம் சென்ற பிரதமர் மோடி, திப்ருகர் தேயிலை தோட்டத்தில் பெண்களுடன் இணைந்து தேயிலை பறித்தார்.
அரசு விழா மற்றும் தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி, இன்று அசாம் சென்றுள்ளார். அங்குள்ள தேயிலை தோட்டத்துக்கு சென்ற மோடி, தேயிலை பறிக்கும் பெண்களுடன் கலந்துரையாடினார். சிறிது நேரம் தேயிலையும் பறித்தார். இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டத்தில் பெண்களுடன் அவர் கலந்துரையாடும் படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.
இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள மோடி, ”தேயிலை என்பது அசாம் மாநிலத்தின் ஆன்மா. இங்கு உற்பத்தியாகும் தேயிலை, உலகம் முழுவதும் பயணிக்கிறது. இன்று காலை திப்ருகர் தேயிலை தோட்டத்தில் பணியாற்றும் பெண்களுடன் கலந்துரையாடினேன். அது ஒரு மறக்க முடியாத அனுபவம்,” என்று கூறியுள்ளார்.
