அரியலூரில் அமைச்சர் சிவசங்கர் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

இந்நிலையில் அரியலூரில் இருந்து திருமானூர் செல்லும் சாலையில் அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் இன்று தனது காரில் சென்றார். அப்போது, கீழப்பழுவூர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படை அலுவலர் நிர்மல்ராஜ் தலைமையிலான குழுவினர், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் காரை மறித்து சோதனையில் ஈடுபட்டனர்.

பறக்கும் படையினரின் சோதனைக்கு அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். மேலும், சோதனையில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் எதுவும் இல்லாததால், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கார் செல்ல தேர்தல் பறக்கும் படையினர் அனுமதித்தனர். இதையடுத்து அமைச்சர் அங்கிருந்து சிவசங்கர் புறப்பட்டுச் சென்றார்.

Source link