இந்தியாவின் முன்னேற்றங்களில் ஒன்றாக மத்திய அரசால் காட்சிப்படுத்தப்படும் வந்தே பாரத் ரெயில்களில் வழங்கப்படும் உணவு அவ்வப்போது சர்ச்சையில் சிக்கி வருகிறது.
அண்மையில் வந்தே பாரத் ரெயிலில் பயணிக்கு வழங்கப்பட்ட தயிரில் புழுக்கள் மிதந்த வீடியோ இணையத்தில் வைரலாகி நடவடிக்கைக்கு வழிவகுத்தது.
இந்த சூழலில் வந்தே பாரத் ரெயிலில் பரிபாமரப்பட்ட உணவால் தானும் தனது 2 வயது குழந்தையும் கடும் ஒவ்வாமைக்கு ஆளானதாக பெண் பயணி ஒருவரின் புகார் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் ராஞ்சியை சேர்ந்த ஆயுஷி சிங், கடந்த மார்ச் 27 பயணத்தின்போது வந்தே பாரத் ரெயிலில் பரிமாறட்ட உணவால் தனக்கு கடும் ஒவ்வாமை ஏற்பட்டதாக தனது புகைப்படத்துடன் இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவரின் உதடுகள் கடுமையாக வீங்கியிருப்பதை காண முடிகிறது.
மேலும் அவரின் கூற்றுப்படி, அவர் உட்கொண்ட அதே ரெயில் உணவால் அவரின் இரண்டு வயது குழந்தைக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மருத்துவ ஆவணங்களையும் இணைத்து உடனே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் சமூக வலைதளத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
