நீங்கள் சாலையில் பயணம் மேற்கொள்ளவிருந்தால், உங்களுக்கு தேவைக்கு அதிகமான எரிபொருளை நிரப்ப வேண்டாம். வழக்கமாக நீங்கள் நிரப்புவது போலவே நிரப்பிக்கொள்ளுங்கள். உங்களை சுற்றியுள்ளவர்களையும் கிராமப்புறங்களில் உள்ளவர்களையும் அத்தியாவசியத் துறைகளில் பணியாற்றுபவர்களையும் கருத்தில் கொள்ளுங்கள்.
வரும் வாரங்களில் நீங்கள் பணிக்குச் செல்லும்போது ரயில், பேருந்து அல்லது டிராம் போன்ற பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்த உங்களால் இயலுமென்றால் தயவுசெய்து அவ்வாறே செய்யுங்கள். ஒரு மாத காலமாக நீடித்து வரும் இந்த மோதல், மேற்கு ஆசியா முழுவதும் பரவி ஆயிரக்கணக்கானோரை கொன்றுள்ளது.
எரிசக்தி விநியோகத்தை தடை செய்துள்ளது. உலகப் பொருளாதாரத்தை அதலபாதாளத்தில் தள்ளும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. வரும் மாதங்கள் எளிதாக இருக்காது. எனினும், அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும்’’ என்று தெரிவித்துள்ளார்.
தனக்கு தேவையான எரிபொருளில் 90 சதவீதத்தை இறக்குமதி செய்யும் நாடு ஆஸ்திரேலியா என்பது குறிப்பிடத்தக்கது.
