காவல்துறையின் கூற்றுப்படி, மார்ச் 26 ஆம் தேதி மாலையில் அவர் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருமணமான அப்பெண் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் அப்பெண்ணை இழுத்துச் சென்று பாலியல்ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். அப்பெண் கூச்சலிட கிராமவாசிகள் தலையிட்டு அவரை மீட்டுள்ளனர்.
தொடர்ந்து 27ஆம் தேதி அப்பெண் அளித்த புகாரில் முக்கிய குற்றவாளிகளான அசோக் யாதவ் மற்றும் மஹாலு மாத்தோ என்ற நவ்நீத் குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மூன்றாவது குற்றவாளியான ரவிகாந்த் குமாரைக் கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்துள்ளனர்.
போலீசார் குற்றவாளிகள் மூன்றுபேர் என தெரிவித்துள்ளனர். ஆனால் வீடியோவில் அப்பெண்ணை சுற்றி ஏராளமானோர் இருக்கின்றனர். அவரை அரைநிர்வாணமாக்கி, சிறிதும் குற்ற உணர்வோ, எவ்வித உணர்ச்சியும் இல்லாதவர்கள்போல சுற்றி நின்று சிரிக்கின்றனர். இதை பார்ப்போருக்கே நெஞ்சின் நடுக்க குறையவில்லை. அப்போது அப்பெண்ணின் மனநிலை?
