இந்நிலையில், ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன், இரண்டாவது பட்டியல் தயாரிக்கும் வரையில், ரயில் ஏறும் இடத்தை மாற்றிக்கொள்ளும் வசதியை தெற்கு ரயில்வே அமல்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: புதிய விதிமுறைப்படி, ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு வரை ஏறும் இடத்தை மாற்றிக்கொள்ள முடியும். இரண்டாவது முன்பதிவுப் பட்டியலில் இடம் பெறும். காத்திருப்போர் பட்டியலில் இருப்போருக்கு, இந்த வசதி கிடையாது. இந்த வசதியை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்றனர்.
