உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில், நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இரட்டை கொலை வழக்கு ஒன்று, நீதிமன்றத் தீர்ப்புடன் முடிவுக்கு வந்துள்ளது. கூர்மையான ஆயுதத்தை கொண்டு தனது மனைவியையும், அவரது உறவுமுறை சகோதரரையும் கொலை செய்த குற்றத்திற்காக, கணவன், அவரது தந்தை மற்றும் சகோதரர் ஆகிய மூவருக்கும் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. மேலும், குற்றம்சாட்டப்பட்ட அந்த மூவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் நீதிமன்றம் விதித்தது.
இந்தச் சம்பவம் கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்றது. ஆக்ராவின் எத்மத்பூர் பகுதியில், தனது மனைவிக்கு வேறொருவருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாகச் சந்தேகப்பட்டு, கணவன் தனது குடும்பத்தினருடன் இணைந்து மனைவியையும், அவரது உறவுமுறைச் சகோதரரையும் கொலை செய்துள்ளார்.
