நாட்டில், 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரில், படித்தவர்களுக்கான வேலையின்மை விகிதம், கடந்தாண்டு 6.50 சதவீதமாக குறைந்துள்ளது என, மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, முந்தைய 2024ல், ஏழு சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அனைத்து பிரிவுகளிலும் வருமானம் அதிகரித்துள்ள போதிலும், பெண்களுக்கான ஊதியத்தில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சுயதொழில் மற்றும் மாத சம்பளம் பெறும் பணிகளில் ஆண்களை விட பெண்களின் ஊதிய வளர்ச்சி விகிதம் வேகமாக உயர்ந்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.
