சென்னை: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நாளை சென்னை வருகிறார். அதன் பிறகு முடிவெடுத்து பாஜ., வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்
சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நாளை சென்னை வருகிறார். அதன் பிறகு முடிவெடுத்து வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். இதில் காலதாமதம் இல்லை. இதனால்பாதிப்பும் இல்லை. பிரதமர் சென்னை வந்து புதுச்சேரி செல்கிறார். கட்சியின் தலைவர்கள் பிரதமரை சந்திப்பார்கள். விரைவில் பாஜ தேர்தல் அறிக்கை வெளியாகும்.
திமுக பிரசார பாடல் வரிகள் உண்மையாக இருக்க வேண்டும். பழைய தேர்தல் அறிக்கையில் உள்ளவற்றை நிறைவேற்றி இருக்க வேண்டும். நல்ல ஆட்சி நடத்தியிருக்க வேண்டும். மாநிலத்தில் கஞ்சா இல்லாமல் இருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு நன்றக இருக்க வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி நடக்கிறது.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கஞ்சா பயன்பாடு இருக்கிறது. திமுகவின் தேர்தல் அறிக்கை ஹீரோ அல்ல ஜீரோ. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
