லண்டன் சென்றடைந்தார் முதல்-அமைச்சர் விஜய்..!

லண்டன்,

முதல்-அமைச்சர் விஜய் லண்டன் சென்றடைந்தார்.

லண்டன் பயணம்

தமிழ்நாட்டின்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் விஜய் செப்டம்பர் 10 முதல் 16 ஆம் தேதி வரை இங்கிலாந்து பயணம் மேற்கொள்கிறார். நேற்று இரவு லண்டன் புறப்பட்டார். முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

நேற்றிரவு சென்னை விமான நிலயத்தில் இருந்து புறப்பட்ட விஜய் துபாய் சென்று அங்கிருந்து லண்டன் புறப்பட்டார். இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய் லண்டன் சென்றடைந்தார். அங்கு முதல்-அமைச்சர் விஜய்க்கு இங்கிலாந்து வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கார் பந்தயத்தை தொடங்கி வைக்கிறார்

நேற்று (செப்டம்பர் 10) சென்னையிலிருந்து புறப்பட்ட முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான குழு வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி நாடு திரும்பும். அவரது குழுவில், விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயலர் மேகநாத ரெட்டி, தொழில் துறை வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தீபக் ஜேக்கப் மற்றும் அரசு அலுவலர்கள் இடம்பெற்றிருக்கின்றனர்.

இந்த அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக, பிரிட்டனில் அஜித்குமார் பங்கேற்கும் ‘Michelin Le Mans Cup’ கார் பந்தயத்தை முதல்-அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.

Source link