ரேஷ்மி தேவியின் மகனுக்கு நீண்ட நாட்களாக இருந்த உடல்நலக் குறைபாட்டைத் தீர்க்கவும், குடும்பப் பிரச்சினைகளை முடிக்கவும் ஒரு கன்னிப் பெண்ணை நரபலி கொடுக்க வேண்டும் என்று அந்த ஊரை சேர்ந்த பெண் சாமியார் சாந்தி தேவி கூறியுள்ளார்.
கணவனை இழந்த ரேஷ்மி தேவி, பீம் ராம் என்பவருடன் காதல் உறவில் இருந்துள்ளார். தனது காதலனுடன் சேர்ந்து மகளை நரபலி கொடுக்க ரேஷ்மி தேவி திட்டம் தீட்டியுள்ளார்.
கடந்த மூன்று மாதங்களாக இதற்கான ஏற்பாடுகள் நடந்துள்ளன. துர்காஷ்டமி அன்று நரபலி கொடுக்க முடிவு செய்யப்பட்டது. பூஜை நடப்பதாகக் கூறி சிறுமியை சாமியார் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
நள்ளிரவில் சிறுமியை அருகிலுள்ள மூங்கில் காட்டிற்கு அழைத்துச் சென்று, பீம் ராம் சிறுமியின் கழுத்தை நெரிக்க, தாய் ரேஷ்மி தேவி கால்களைப் பிடித்துக் கொண்டுள்ளார். சிறுமியின் தலையை மோதி ரத்தத்தை சேகரித்து நரபலி கொடுத்துள்ளனர்.
இது ஒரு பாலியல் வன்கொடுமை கொலை போலக் காட்ட முயற்சி செய்து சிறுமியின் தாய் பக்கத்து வீட்டுக்காரர் மீது பொய்ப் புகார் அளித்து நாடகமாடியுள்ளார். உண்மை வெளிப்பட்ட நிலையில் ரேஷ்மி தேவி, பீம் ராம் மற்றும் சாமியார் சாந்தி தேவியை கைது செய்தனர்.
