“அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பணிந்து போகிறார் பிரதமர் மோடி”

கொல்லம்: சமையல் எரிவாயு மற்றும் பிற எரிபொருட்களின் விலை உயர்ந்திருக்கும் சூழலில், “பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்காக உறுதியாக நிற்கவில்லை. அவர் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு பணிந்துபோகிறார்” என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார்.

கேரள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கொல்லத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய பிரியங்கா காந்தி, “சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் விலைகள் அனைத்தும் கடுமையாக உயர்ந்து வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் வர்த்தகம் மேற்கொள்வது மேலும் கடினமாகப் போகிறது.

இவை அனைத்துக்கும் மத்தியில், நரேந்திர மோடியின் தலைமையிலான நமது மத்திய அரசின் கொள்கை என்ன? அவர் தனது மக்களுக்காகப் போராடவில்லை. அவர் இந்தியாவுக்காகப் போராடவில்லை. அவர் இந்தியாவுக்காக உறுதியாக நிற்கவில்லை. அவர் செய்துகொண்டிருப்பது எல்லாம் அமெரிக்காவுக்கு பணிந்துபோவதும், இஸ்ரேலுக்கு பணிந்துபோவதும் மட்டுமே.

Source link