நெல்லை: “விஜய்க்கு கூடும் கூட்டம் என்பது வெறும் ‘சினிமா கூட்டம்’ மட்டுமே. அது வாக்குகளாக மாறாது” என்று தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத் திருத்தம், சிறுபான்மை அமைப்புகளை குறிவைத்து கொண்டுவரப்பட்டது. இதன்படி, கிறிஸ்தவ மற்றும் சிறுபான்மை தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து நேரடியாக நிதி பெற முடியாது, அரசின் மூலமே பெற வேண்டும்.
