அதேபோல், அதிமுக சார்பில் அபிஷேக் ரங்கசாமி போட்டியிடுகிறார். இவர் தென்சென்னை வடக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளராக இருக்கிறார். தொகுதிக்கு பெரிதாக பரிட்சயம் இல்லாதது இவருக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
தவெக சார்பில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ராஜ்மோகன், நாம் தமிழர் கட்சி சார்பில் சரண்யா ஆகியோரும் களமிறங்குகின்றனர். கள நிலவரத்தின்படி நான்குமுனைப் போட்டியாக இருந்தாலும் அதிமுக, திமுக இடையேதான் இங்கு கடும் போட்டி நிலவுகிறது.
இந்த தொகுதியில் அதிகம் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களே வெற்றியை தீர்மானிப்பவர்களாக உள்ளனர். அதில் கணிசமான வாக்குகளை தவெக பிரிக்கும். மேலும், தவெக-வுக்கு தொகுதி முழுவதும் பரவலாக ஆதரவு இருப்பதையும் காணமுடிகிறது. இதனால் இம்முறை வெற்றி வாய்ப்பு திமுகவுக்கு எளிதாக இருக்காது என்று கூறப்படுகிறது.
வாக்காளர்கள் விவரம்
ஆண்கள் – 65,677
பெண்கள் – 69,149
3-ம் பாலினத்தவர் – 53
மொத்த வாக்காளர்கள் – 1,34,879
