கோழிக்கோடு: கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி சார்பில், முதல்வர் பினராயி விஜயன் தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: கேரளாவில் ஏழ்மையை முற்றிலும் ஒழிக்க, குடும்ப நல ஓய்வூதியம் ரூ.3,000 ஆக உயர்த்தப்படும். இதன் மூலம் 5 லட்சம் ஏழை குடும்பங்கள், வறுமையிலிருந்து மீள உதவும். மக்களுக்கு முறையாக மருத்துவ வசதிகள்கிடைப்பதை உறுதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
