தூக்கு தண்டனை வழங்க சிபிஐ இறுதி வாதம்

பின்​னர் காவல் நிலை​யத்​தில் வைத்து இரவு முழு​வதும் போலீ​ஸார் தாக்​கிய​தில் முதலில் பென்​னிக்​ஸ், அடுத்து ஜெய​ராஜ் உயி​ரிழந்​தனர். இதையடுத்து சிபிஐ கொலை வழக்​குப் பதிவு செய்து காவல் ஆய்​வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்​வாளர்​கள் பால​கிருஷ்ணன், ரகு​கணேஷ், காவலர்​கள் முரு​கன், சாமதுரை, முத்​து​ராஜா, செல்​லத்​துரை, தாமஸ் பிரான்​சிஸ், வெயிலு​முத்து ஆகியோர் கைது செய்​யப்​பட்டு மதுரை மத்​தி​யச் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலா​வது கூடு​தல் நீதி​மன்​றத்​தில் விசா​ரிக்​கப்​பட்​டது. விசா​ரணை முடிந்து 9 பேரும் குற்​ற​வாளி​கள் என்​றும் தண்​டனை விவரம் பின்​னர் அறிவிக்​கப்​படும் என்​றும் நீதிபதி முத்​துக்​குமரன் உத்​தர​விட்​டார். இந்​நிலை​யில் இந்த வழக்கு நீதிபதி முத்​துக்​குமரன் முன்பு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. ஸ்ரீதர் உள்​ளிட்ட 9 பேரை​யும் போலீ​ஸார் ஆஜர்​படுத்​தினர்.

பின்​னர் சிபிஐ வழக்​கறிஞர் விஜயன் வாதிடு​கை​யில், குற்​றம் நிரூபிக்​கப்​பட்​ட​தால் குற்​ற​வாளி​களுக்கு அதி​கபட்ச தண்​டனை வழங்க வேண்​டும். தூக்​குத் தண்​டனை, இரட்டை ஆயுள் போன்ற அதி​கபட்ச தண்​டனை வழங்க வேண்​டும். அரி​தினும் அரி​தான காவல் கொடூர மரண வழக்​கு​களில் தூக்​குத் தண்​டனை வழங்​கலாம் என உச்ச நீதி​மன்​றம் தெரி​வித்​துள்​ளது.

Source link