15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் போக்சோ வழக்கில் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவிட்டு பாதியில் நின்று விட்டார். இந்நிலையில் அந்த சிறுமியின் பெற்றோர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் காம்பவுண்ட் சுவர் கட்டுவதற்கு வந்தனர்.

அப்போது நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா திடுமல் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (22) என்பவர் அந்த பகுதியில் ஜே.சி.பி. ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் 15 வயது சிறுமி அவரது பெற்றோரிடம் தனது தோழியை பார்த்து வருவதாக கூறிவிட்டு பல்லடம் பகுதியில் இருந்து பஸ் ஏறி பரமத்தி வேலூர் வந்தார். அங்கு வந்த சிறுமியை சக்திவேல் அழைத்து கொண்டு வீட்டுக்கு வந்தார். வீட்டில் யாரும் இல்லாததால் சக்திவேல் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர் அந்த சிறுமி அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

Source link