பெரும் அதிர்ச்சி!. நடுக்கடலில் மூழ்கிய இந்தோனேசிய கப்பல்!. 140 பேர் மாயம்; 102 பேர் மீட்பு!. தீவிர தேடுதல் வேட்டை! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் இருந்து போர்னியோ தீவில் உள்ள தெற்கு கலிமந்தான் நோக்கி சுமார் 240 பேருடன் சென்ற பயணிகள் கப்பல் ஒன்று ஜாவா கடலில் திடீரெனத் தொடர்பை இழந்தது. கப்பலையும் அதில் உள்ளவர்களையும் கண்டறியும் பணியில் அவசரகால மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சுரபாயா நகரத்திலிருந்து பஞ்ஜர்மசின் (Banjarmasin) நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்தக் கப்பல், ஜாவா கடற்பகுதியில் பயணம் செய்தபோது திடீரென தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றது. இதனையடுத்து அதிகாரிகள் உடனடியாக தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். மேலும், கப்பலின் கடைசி இருப்பிடத்தை நோக்கி மீட்புக் கப்பல் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் தகவல்பபடி, ‘விர்கோ டிரான்ஸ்போர்ட் 8’ (Virgo Transport 8) என அடையாளம் காணப்பட்டுள்ள இந்தப் பயணிகள் கப்பல், இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய நகரான சுரபாயாவிலிருந்து தெற்கு கலிமந்தானின் தலைநகரான பஞ்ஜர்மசின் நோக்கிப் பயணம் செய்துள்ளது. பஞ்ஜர்மசின் தேடுதல் மற்றும் மீட்புப் பிரிவு அலுவலகத்திற்குப் பயணம் நடுவே கப்பலில் தகவல் தொடர்புத் தடை ஏற்பட்டதாகத் தகவல் கிடைத்தது. மோசமான வானிலையை அந்தக் கப்பல் எதிர்கொண்டதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, கப்பல் நிர்வாகம் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்ததாகத் தேடுதல் மற்றும் மீட்புக் பிரிவுத் தலைவர் ஐ புடு சுதயானா (I Putu Sudayana) தெரிவித்துள்ளார்.

பஞ்ஜர்மசினில் உள்ள ஒரு துறைமுகத்திலிருந்து சுமார் 148 கிலோமீட்டர் தொலைவில் ஜாவா கடற்பகுதியில் இந்தக் கப்பல் கடைசியாகத் தொடர்பு எல்லையில் இருந்ததாக ஆரம்பக்கட்டத் தகவல்கள் தெரிவித்தன.

தேடுதல் பணி விரிவுபடுத்தப்பட்ட நிலையில், குறைந்தது 102 பேர் மீட்கப்பட்டனர் மற்றும் ஒரு பயணி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். சுமார் 140 பயணிகள் மற்றும் பணியாளர்கள் காணாமல் போனதாக இந்தோனேசிய மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

தேடல் மற்றும் மீட்பு அலுவலகத்தின் தலைவரான ஐ புட்டு சுதயானா, கப்பல் ஒருபுறம் சாய்வதாகக் கூறி ஆபத்துச் செய்தி அனுப்புவதற்கு முன்பு, 10 அடி உயரம் வரை அலைகள் எழுந்ததால் கடல் கொந்தளிப்பாக இருப்பதாக கேப்டன் முன்னதாகவே தெரிவித்திருந்ததாகக் கூறினார். பின்னர், கப்பல் கவிழ்ந்துவிட்டதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. சுதயானா மேலும் கூறுகையில், “கப்பல் மோசமான வானிலையை எதிர்கொண்டதாகத் தகவல் கிடைத்த பிறகு, கப்பலின் உரிமையாளர் இந்தச் சம்பவத்தை அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்” என்றார்.

Source link