“தமிழ் சினிமாவில் போர் தொடர்பான நிறையப் படங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால்.!- நீளிரா படத்தை பாராட்டிய சூர்யா| “many war films released in tamil cinema.but this movie.!”- says suriya

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் தெலுங்கு நடிகர் ராணா டகுபதி இணைந்து தயாரித்திருக்கும் ‘நீளிரா’ திரைப்படம் இன்று (ஏப்ரல் 3) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

இலங்கையின் போர் பதற்ற சூழலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை சோமிதரன் இயக்கியிருக்கிறார்.

நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தைப் பாராட்டி நடிகர் சூர்யா வீடியோ வெளியிட்டிருக்கிறார். வீடியோவில் பேசியிருக்கும் அவர், ” “நீளிரா’ என்றால் நீண்ட இரவு என்று அர்த்தம்.

இப்போது நடந்துகொண்டிருக்கும் போராலேயே நம் அன்றாட வாழ்வுகள் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.

அதில் இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படுவது இன்னும் சாதாரண மக்கள் தான். ஒரு போர் சூழலில் கல்யாணம் நடக்கிறது.

Source link