தினசரி தங்கள் கண்முன்னே நடக்கும் மரணங்கள், ரத்தக் கறைகள் மற்றும் இறுதிச்சடங்குகளைப் பார்த்து வளர்வதால், குழந்தைகளின் விளையாட்டுகளும் இப்போது மரணம் மற்றும் துக்கத்தைச் சுற்றியே அமைந்திருப்பதாக மனநல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
போரினால் அவர்கள் அனுபவிக்கும் கடுமையான மன ரீதியான பாதிப்பின் வெளிப்பாடே இது போன்ற செயல்கள் என்று கூறப்படுகிறது.
காசாவின் தெருக்களில் ஒரு காலத்தில் ஓடிப் பிடித்து விளையாடிய குழந்தைகளின் குரல்கள், இன்று அமைதியான இறுதி ஊர்வலங்களாக மாறியிருப்பது போரின் கோர முகத்தை உலகுக்குக் காட்டுகிறது.
Save the Children உள்ளிட்ட அமைப்புகள், காசா குழந்தைகள் கடுமையான மன வேதனையை அனுபவித்து வருவதாகவும், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை இழந்து வருவதாகவும் தங்கள் அறிக்கைகளில் எச்சரித்துள்ளன.
