தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

புதுச்​சேரி​யில், தேசிய ஜனநாயகக் கூட்​டணி வேட்​பாளர்​களுக்கு ஆதர​வாகப் பிரச்​சா​ரம் செய்ய பிரதமர் நரேந்​திர மோடி நேற்று டெல்​லி​யில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்​தார். அங்​கிருந்து ஹெலி​காப்​டர் மூலம் புதுச்​சேரி சென்ற அவர், அங்கு நடை​பெற்ற பிரம்​மாண்ட ரோடு ஷோவில் பங்​கேற்​றார். பிரச்​சா​ரத்தை முடித்​துக்​கொண்டு நேற்​றிரவு மீண்​டும் சென்னை திரும்​பிய அவரை, பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், மத்​திய அமைச்​சர்​கள் பியூஸ் கோயல், எல்​.​முரு​கன் உள்​ளிட்ட முக்​கிய தலை​வர்​கள் வரவேற்​றனர்.

விமான நிலை​யத்​தில் இருந்து கார் மூலம் கிண்​டி​யில் உள்ள நட்​சத்​திர விடு​திக்​குச் சென்ற பிரதமர் மோடி, கட்​சி​யின் முக்​கிய நிர்​வாகி​களை சந்தித்தார். அப்போது சில முக்​கிய அம்​சங்​கள் விவா​திக்​கப்​பட்​ட​தாகத் தெரி​கிறது. தமிழகத்​தில் பாஜக சார்​பில் போட்​டி​யிடும் வேட்​பாளர்​களின் வெற்றி வாய்ப்​பு​கள் மற்​றும் கள நில​வரம் குறித்து அப்​போது அவர் கேட்​டறிந்​தார்.

Source link