வாக்குப்பதிவு நாளன்று தினக்கூலி தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை

மக்​கள் பிர​தி​நி​தித்​து​வச்சட்​டம், 1951-இன் பிரிவு 135B-ன்​படி, வணி​கம், வர்த்​தகம், தொழில் துறை நிறு​வனங்​கள் அல்​லது வேறு ஏதேனும் நிறு​வனங்​களில் பணிபுரி​யும், வாக்​களிக்​கத் தகு​தி​யுள்ள ஒவ்​வொரு நபருக்​கும் வாக்​குப்​ப​திவு நாளன்று ஊதி​யத்​துடன் கூடிய விடு​முறை வழங்​கப்பட வேண்​டும்.

இத்​தகைய ஊதி​யத்​துடன் கூடிய விடு​முறைக்​காக ஊழியர்​களின் ஊதி​யத்​தில் எந்த பிடித்​த​மும் செய்​யப்​படக்​கூ​டாது. இந்த விதி​முறை​களை மீறும் எந்​தவொரு முதலா​ளி​யும் அபராதத்​துக்கு உள்​ளா​வார்​கள். அனைத்து தினக்​கூலி மற்​றும் தற்​காலிகத் தொழிலா​ளர்​களும் வாக்​குப்​ப​திவு நாளன்று ஊதி​யத்​துடன் கூடிய விடு​முறை பெறத் தகு​தி​யுடைய​வர்​கள்.

இந்த விதி​முறை​களைத் துல்​லிய​மாகப் பின்​பற்​று​வதற்​கும், அனைத்து வாக்​காளர்​களும் சுதந்​திர​மாக​வும் வசதி​யாக​வும் தங்​கள் வாக்​குரிமை​யைப் பயன்​படுத்​து​வதை உறு​தி​ செய்​வதற்​கும் தேவை​யான உத்​தர​வு​களை அனைத்து சம்​பந்​தப்​பட்​ட​வர்​களுக்​கும் பிறப்​பிக்​கு​மாறு மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது. இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ளது.

Source link